வெள்ளி, 7 நவம்பர், 2008

தாடி

மறுப்பின் வலி மறைக்க
மயிர் கற்றைகளில் முகம்
மறைத்து திரிகிறேன்...

நிழல்

உன் நிழல் தேடி திரிகிறேன்
தஞ்சம் புக அல்ல - அதையும்
தரையில் விழாமல் தாங்கி நிற்கவே..

பூவிதழ்கள்

பூக்களுக்கும் உன் மீது பொறாமை தான்
எண்ணற்ற இதழ்கள் கொண்டிருந்தும்
ஈரிதழ் கொண்டு நீ சிந்தும்
புன்னகையின் வசீகரம் தனக்கில்லையே என்று ..

இதழ்கள்

முத்தங்கள் பரிமாறிக்
கொண்ட இதழ்கள்
இன்று சத்தங்கள்
பரிமாற மறுக்கின்றன..